மியன்மாரின் – மியாவதியில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் மேலும் ஒரு குழு மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட 14 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களைத் தாய்லாந்தில் உள்ள பாதுகாப்பான இடமொன்றுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, பல சந்தர்ப்பங்களில் மியன்மாரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.