Header image alt text

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் தலைமறைவாகி கண்ட இடத்தில் கைது செய்யம்படி நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டுவந்த தேஷபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றில் இன்று(19) முற்பகல் ஆஜரானார். அவரை நாளை(20) வரை விளக்கமறியலில் வைப்பதாக மாத்தறை நீதவான் உத்தரவிட்டார். Read more

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஏப்ரல் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செய்தித்தாள் அச்சிடுவதற்கான காகிதங்களை வாங்கியதன் மூலம் 12 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறி, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல முன்னிலையில் இன்று இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. அதேநேரம் வேட்புமனுக்கள் நாளை நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும். Read more

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மென் மொரினோவுக்கும்  சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை நாடாளுமன்றம் என்பவற்றுக்கிடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தி எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. Read more

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவரை கைது செய்வதற்காகப் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்றுடன் 11 நாட்கள் கடந்துள்ள போதிலும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்னும் கைது செய்யப்படவில்லை. Read more

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக ருக்தேவி பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு வழங்கப்பட்ட அனுமதிக்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. Read more

பூநகரி பிரதேச சபை, மன்னார் பிரதேச சபை மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபை ஆகியவற்றுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்குக் கடந்த 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை குறித்த மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். குறித்த பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் கலேவல பிரதேச சபை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

உயர்நீதிமன்றத்தினால் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்காக வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி  மாத்தறை வெலிகம ஹோட்டலுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அப்போதைய பதில் பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட 08 பேரை கைது செய்யுமாறு  பெப்ரவரி 08 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. Read more