ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மென் மொரினோவுக்கும்  சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை நாடாளுமன்றம் என்பவற்றுக்கிடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தி எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் புதிய அரசியல் மாற்றம் மற்றும் புதிய அரசியல் கலாசாரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.