மலர்வு – 07.04.1937உதிர்வு – 22.03.2025
யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்லாந்து சூரிச்சை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி விஜயநாதன் தங்கமுத்து அவர்கள் இன்று (22.03.2025) சனிக்கிழமை சூரிச்சில் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
இவர் சுவிஸில் கழகத்தின் பணிகள் சிறப்புறுவதற்கு அறிவுரைகளும், ஊக்கமும் தந்து, கழக செயற்பாடுகளுக்கு உறுதுணையாய் நின்று உதவிகளை வழங்கிய அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் (இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார்) அவர்களின் அன்பு மனைவியும், சுவிஸ் தோழர் குமார்அண்ணர் (வி.இரத்தினகுமார்) அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)