மாத்தறை ரூனெயளர் தேவேந்திரமுனை பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு மாத்தறை தேவேந்திரமுனை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். உந்துருளியில் பயணித்த இருவரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வேன் ஒன்றில் பிரவேசித்த தரப்பினர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதுடன் அவர்கள் தப்பிச் சென்று சிறிது தூரத்துக்குப் பின்னர் குறித்த வேனை தீ மூட்டியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாத்தறை தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடைய இருவரே இவ்வாறு துப்பாக்கி சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மாத்தறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.