தையிட்டியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள மற்றுமொரு கட்டடம் திறக்கப்படுகின்றமைக்கு யாழ்ப்பாணம் – தையிட்டியில் சட்டவிரோத விகாரை கட்டுமானம் அமைந்துள்ள பகுதியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள மற்றுமொரு கட்டடம் திறக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த பகுதியில் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட தரப்பினரால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தையிட்டி பகுதியில் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு, விகாரையொன்று கட்டப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் காணி உரிமையாளர்களுக்கு கொழும்பில் வைத்து உறுதியளித்த சில நாட்களிலேயே இவ்வாறான செயற்பாடு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.