கொழும்பு வலயத்தில் உள்ள உப தொடருந்து நிலையங்களில், இணைந்த சேவையில் ஈடுபட்டுள்ள சகல தொடருந்து நிலைய அதிபர்களும் இன்று நள்ளிரவு முதல் தொடருந்து நிலைய கடமைகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர். தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

தொடருந்து நிலைய அதிபர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாமை மற்றும் ஆளணி வெற்றிடம் நிரப்பப்படாமை என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த தீர்மானத்தால் தொடருந்து போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.