Header image alt text

வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் திடீர் சுற்றி வளைப்பு மேற்கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்படும் நபர்களைக் கைது செய்தல் மற்றும் போதைப் பொருளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. Read more

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் குறித்த மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ளது. Read more

வாரியபொலவில் விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படையின் விமானிகளைப் பயிற்றுவிக்கும் K8 ரக விமானத்தில் எந்தக் கோளாறும் இல்லை என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். விபத்து தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். Read more

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன், தேசிய காவல்துறை ஆணைக்குழுவினால் காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பிரதி காவல்துறை மா அதிபர்கள் இருவருக்கும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் இருவருக்கும் இவ்வாறு இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வலிகாமம் வடக்கு பிரதேச சபை வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்றையதினம் (23.03.2025) தெல்லிப்பழை காங்கேசந்துறை வீதியில் அமைந்துள்ள வாலிபர் ஐக்கிய சங்க சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் புளொட் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், Read more

இந்தியாவில் உள்ள இலங்கை ஏதிலிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பான உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துவதற்கு உரிய தரப்புகளிடம் கோரிக்கை முன்வைப்பதாக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை ஏதிலிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில், அந்த செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் அரச சாரா நிறுவனத்துடன், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Read more

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் தேர்தல் தொடர்பான செலவு அறிக்கையை சமர்ப்பிக்க தவறுபவர்கள் மூன்று வருடங்களுக்கு வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும் என பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். Read more

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளை இன்று முதல் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்டச் செயலகங்களிலிருந்து பெறப்படும் வரிசையில், வாக்குச் சீட்டுகள் தொடர்பான விபரங்கள் அச்சகத்திற்கு அனுப்பப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். Read more

இலங்கையில் முதல் விந்தணு வங்கி கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ளது. மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ள தம்பதியினருக்கு தீர்வு வழங்கும் நோக்கில் விந்தணு வங்கி அமைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தன்தநாராயணா தெரிவித்தார். Read more

 நாட்டிலுள்ள சுமார் 10 இலட்சம் குற்றவாளிகளின் கைவிரல் அடையாளங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. நீதிமன்றங்களின் ஊடாக குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களின் கைவிரல் அடையாளங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more