Header image alt text

கனேடிய பொதுத் தேர்தலில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட Gary Anandasangaree மற்றும் Juanita Nathan ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். கனடாவின் நீதி அமைச்சராகவும் சட்ட மாஅதிபராகவும் பதவி வகிக்கும் இலங்கை தமிழரான Gary Anandasangaree இம்முறை பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். Read more

சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன பதில் சட்ட மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்ட மாஅதிபர் பாரிந்த ரணசிங்க வௌிநாடு சென்றுள்ளமையினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

28.04.2024 இல் யாழ்ப்பாணம் மானிப்பாயில் மரணித்த தோழர் பவுண் (இராஜநாயகம் சிவகுமாரன்) அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள்…

தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக புளொட் தலைவரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Read more

கேள்வி :
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உங்கள் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி போட்டியிடாத ஏனைய உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள உங்கள் ஆதரவாளர்களின் வாக்குகளை யாருக்கு பெற்றுக் கொடுப்பீர்கள்? இதற்கென ஏதேனும் கட்சிகளுடன் உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளீர்களா?
பதில்:
உத்தியோகபூர்வமாக அவ்வாறான உடன்பாடுகள் எதுவும் ஏனைய கட்சிகளுடன் இதுவரையிலும் இல்லை.

Read more

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாம்களை நிறுவுதல் மற்றும் நடத்திச் செல்லல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. Read more

பாணந்துறை – ஹிரண பகுதியில் இன்று(29) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 35 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் 20 வயதான இளைஞரொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஹிரண பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். Read more

வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாகக் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் பாதுகாப்புப் படையினர் இன்று அவரை சோதனையொன்று நடத்தினர். ரஷ்ய தூதரகத்திற்குப் வெளியாட்டுப் பொங்கிய வங்கிய சந்தேகத்திற்கிடமான மடிக்கணினி ஒன்றினால் அங்கு வெடிகுண்டு அச்சம் ஏற்பட்டது. அந்த வெளியாட்டாளர் தூதரகத்திற்குள் வந்து, மடிக்கணினியை கொண்துவிட்டு, விரைவாகச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. Read more

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அத்தனகல்ல பிரதேச சபைக்குக் கதிரை சின்னத்தில் போட்டியிடும், பொதுஜன ஐக்கிய முன்னணியின் வேட்பாளர்களால் தமது பெயர் மற்றும் படம் என்பன, பிரச்சாரத்துக்காக அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டு அவர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார். Read more

சீனாவின் வர்த்தகத்தை அமைச்சர் வாங் வெண்டாவோ, எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் ஜெனிபி டொனால்ட் ட்ரம்ப் உலக நாட்களுக்கு விதித்துள்ள பர்ஸ்பர் தீர்வை விற்பனை காரணமாக பல்வேறு நாடுகள் வர்த்தக நீதியான பாதிப்புகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலவிலி, அவ்வாறு விஜயம் அமைந்துள்ளது. Read more