Header image alt text

01.04.1993 அன்று வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் கரன் (வீரபுத்திரன் இன்பரவி – கடுக்காமுனை), காளிதாஸ் (அங்குசாமி சந்திரமோகன் – ஏறாவூர்), மதன் (கிறிஸ்டியான் ஜெபஸ்டியான் – கல்லடி) ஆகியோரின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..

மோட்டார் வாகனங்கள் தொடர்பான அனைத்து சேவைகளுக்காகவும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான அறிக்கை ஒன்றை அந்த திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது. Read more

இலஞ்சம் பெற்றுக்கொள்ள உதவிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை எதிர்வரும் 8ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி இன்று உத்தரவிட்டுள்ளார். Read more

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடந்த 27 ஆம் திகதி கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க முன்னிலையான போது கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட அவர் அன்றைய தினமே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். Read more

இத்தாலியின் ட்ரெண்டினோ நகரத்தில் உள்ள கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு வீடு மற்றும் பணம் வழங்க இத்தாலி அரசு தீர்மானித்துள்ளது. இந்த நகரத்தின் 33 கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு சொந்தமாக வீடு மற்றும் இந்திய மதிப்பில் 92 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்க முடிவு செய்துள்ளது. வெளிநாட்டவரும் இந்த வாய்ப்பை பெறலாம் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளையும் நாளை வரை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

மியன்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நிவாரண குழுவை இலங்கையிலிருந்து அனுப்ப தயாராகவுள்ளதாக இராணுவம் தெரிவிக்கின்றது. மியன்மாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதனை நிறைவேற்றுவதற்கு தயாராகவுள்ளதாக இராணுவப் பேச்சாாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார். Read more