நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடந்த 27 ஆம் திகதி கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க முன்னிலையான போது கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட அவர் அன்றைய தினமே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

3 குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதான சாமர சம்பத் தசநாயக்கவிற்கு இரண்டு குற்றச்சாட்டுக்களுக்காகப் பிணை வழங்கப்பட்டது.

எனினும், மற்றுமொரு குற்றச்சாட்டுக்காக அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது நீதிமன்றில் முன்னிலையான கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் குறித்த வழக்குகள் தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை எனத் தெரிவித்திருந்தனர்.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் முன்வைத்த சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்ட நீதவான் எதிர்வரும் 08ஆம் திகதி வரை சாமர சம்பத் தசநாயக்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.