Header image alt text

திருகோணமலைக்கு விஜயம் செய்த ஐ.நா. அதிகாரியின் வதிவிடப் பிரதிநிதி Marc-André Franche மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாநகரசபை பெண் வேட்பாளர் திருமதி இ.வசந்தினி ஆகியோரிடையே முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று 05/04/2025 அன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

Read more

தமிழ்நாடு இராமேஸ்வரத்தில்  கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலமான புதிய பாம்பன் பாலம் இன்று பிற்பகல் இந்தியப் பிரதமர் நரேந்திரத மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்திய மதிப்பில் சுமார் 700 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  கடல் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் 72.5 மீட்டர் நீளமுள்ள பகுதியை தூக்கி, அதன் கீழ் கப்பல்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி 17 மீற்றர் உயரத்திற்கு தூக்கப்படும் வகையில் கட்டப்பட்டுள்ளது. Read more

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் நாடு திரும்பினார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் அனுராதபுரத்திற்கு சென்றார். Read more

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது அனுராதபுரம் தொடருந்து நிலையத்தின் சமிக்ஞை அமைப்பை அவர் திறந்து வைத்தார். மேலும் நவீனமயமாக்கப்பட்ட மஹவ – ஓமந்தை தொடருந்து பாதையையும் இந்தியப் பிரதமர் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் மனிதாபிமான அணுகுமுறை பேணப்பட வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது பாக்கு நீரிணையின் இரு பக்கமும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சினை என்பதால் இந்த விடயத்தில் மனிதாபிமானதும் ஆக்கப்பூர்வமானதுமான அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும். Read more

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அநுராதபுரத்திற்குச் செல்லவுள்ளார். இதன்போது, இந்தியப் பிரதமர் அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் இந்தியப் பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு அநுராதபுர நகரைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. Read more