முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கையூட்டல் பெறுவதற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சந்தேக நபர் மீதான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு இன்று நீதிமன்றில் தெரிவித்திருந்தது.
இதனையடுத்தே வியாழேந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், குறித்த சந்தேகநபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
இதேநேரம் சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஈஃன