2019 ஏப்ரல் 21 ம் திகதி பயங்கரவாதிகளினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஆறு வருடங்கள் நிறைவு பெறுகின்றன. தாக்குதலில் உயிர்நீத்த அனைவருக்கும் எமது இதயபூர்வ அஞ்சலிகளை சமர்ப்பிப்பதுடன் அவர்களின் ஆன்மா அமைதி பெற பிரார்த்திக்கின்றோம்.Posted by plotenewseditor on 21 April 2025
						Posted in செய்திகள் 						  
2019 ஏப்ரல் 21 ம் திகதி பயங்கரவாதிகளினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஆறு வருடங்கள் நிறைவு பெறுகின்றன. தாக்குதலில் உயிர்நீத்த அனைவருக்கும் எமது இதயபூர்வ அஞ்சலிகளை சமர்ப்பிப்பதுடன் அவர்களின் ஆன்மா அமைதி பெற பிரார்த்திக்கின்றோம்.Posted by plotenewseditor on 21 April 2025
						Posted in செய்திகள் 						  
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் மே 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மஹர நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியொன்றைப் போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாகக் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
Posted by plotenewseditor on 21 April 2025
						Posted in செய்திகள் 						  
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஏறத்தாழ 20 நீதிப்பேராணை மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் இந்த நீதிப்பேராணை மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.
Posted by plotenewseditor on 21 April 2025
						Posted in செய்திகள் 						  
ஜே.வி.பியின் தேசியப் பட்டியலில் இருந்த இப்ராஹிம் என்பவரே ஏப்ரல் 21 தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்குப் பணம் மற்றும் அதிகாரம் என்பவற்றை வழங்கியுள்ளதாக அமெரிக்காவின் எஃப்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். Read more