நோட்டிகா அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. தாய்லாந்திலிருந்து 614 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 397 பணியாளர்களுடன் குறித்த கப்பல் வருகைதந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த பின்னர், இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் நாளை பிற்பகல் இந்தியாவிற்கு புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.