Header image alt text

சலுகை தொடர்பான நிபந்தனைகள் குறித்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இந்தக் குழு எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. பரீட்சைகள் திணைக்களத்தின் Doenets.LK உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும். இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 3,33,185 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

கட்டுநாயக்க – ஹீனடியன – இஹல மெண்டிய பகுதியில் இன்று உந்துருளியில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். Read more

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 29 வயதுடைய நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உந்துருளியில் வந்த இருவரினால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

25.04.1985 இல் மரணித்த தோழர் நாதன் (தேவராஜ் ஜெயசிங்கம் – மன்னார்) அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 05ஆவது தவணையை விடுவிப்பதற்கு அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கைக்கு 344 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைக்கவுள்ளது. Read more

சமூக செயற்பாட்டாளரான டேன் பிரியசாத் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சமூக செயற்பாட்டாளரான டேன் பிரியசாத் கடந்த 22 ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். Read more

ஜம்மு – காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடி கண்டனம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இரு நாட்டுத் தலைவர்களும் சுமார் பதினைந்து நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர். Read more

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்குழுவில் நீதியரசர் நீல் இத்தவெல மற்றும் காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

தெவிநுவர இரட்டை கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த 2 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 33 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more