எனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதலாவது தீர்மானம்Posted by plotenewseditor on 22 April 2025
Posted in செய்திகள்
எனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதலாவது தீர்மானம்Posted by plotenewseditor on 22 April 2025
Posted in செய்திகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு வவுனியாவில் நடைபெற்றதுPosted by plotenewseditor on 22 April 2025
Posted in செய்திகள்
இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மருந்துகளை அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 சந்தேக நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 22 April 2025
Posted in செய்திகள்
அமெரிக்காவின் வரி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வொஷிங்டன் சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு அங்கு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி அறவிடப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 22 April 2025
Posted in செய்திகள்
பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனிடம் அவருக்கு எதிரான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். Read more
Posted by plotenewseditor on 22 April 2025
Posted in செய்திகள்
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராயக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் நால்வரடங்கிய குழு ஒன்றே இதனை ஆராய நியமிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 22 April 2025
Posted in செய்திகள்
கட்டுநாயக்க ஆடியம்பலம் பகுதியில் தொழிலதிபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உந்துருளியில் பிரவேசித்த இருவரே இந்தத் தாக்குதலை நடத்த முற்பட்டனர். எனினும் அவர்களின் துப்பாக்கி இயங்காமல் போனதால் முயற்சி தோல்வியடைந்தது. Read more
Posted by plotenewseditor on 21 April 2025
Posted in செய்திகள்
2019 ஏப்ரல் 21 ம் திகதி பயங்கரவாதிகளினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஆறு வருடங்கள் நிறைவு பெறுகின்றன. தாக்குதலில் உயிர்நீத்த அனைவருக்கும் எமது இதயபூர்வ அஞ்சலிகளை சமர்ப்பிப்பதுடன் அவர்களின் ஆன்மா அமைதி பெற பிரார்த்திக்கின்றோம்.Posted by plotenewseditor on 21 April 2025
Posted in செய்திகள்
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் மே 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மஹர நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியொன்றைப் போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாகக் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
Posted by plotenewseditor on 21 April 2025
Posted in செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஏறத்தாழ 20 நீதிப்பேராணை மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் இந்த நீதிப்பேராணை மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.