31.05.1993இல் வவுனியாவில் மரணித்த தோழர்கள் றொபேட் (குமாரசாமி கேதீஸ்வரன் – முள்ளிவாய்க்கால்), சூர்யா (க.ரவிச்சந்திரன் – சிதம்பரபுரம்), தம்பா (இ.இராஜேந்திரன்) – வவுனியா) ஆகியோரின் 32ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று..
Posted by plotenewseditor on 31 May 2025
Posted in செய்திகள்
31.05.1993இல் வவுனியாவில் மரணித்த தோழர்கள் றொபேட் (குமாரசாமி கேதீஸ்வரன் – முள்ளிவாய்க்கால்), சூர்யா (க.ரவிச்சந்திரன் – சிதம்பரபுரம்), தம்பா (இ.இராஜேந்திரன்) – வவுனியா) ஆகியோரின் 32ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று..
Posted by plotenewseditor on 31 May 2025
Posted in செய்திகள்
31.05.2023இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் கிருபா மாஸ்டர் (அமரர் கந்தையா கிருபைராஜா – களுவாஞ்சிக்குடி) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி…Posted by plotenewseditor on 31 May 2025
Posted in செய்திகள்
ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் திரிபு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் வைரஸின் துணை வகைகளான எல் எஃப் பொயிண்ட் செவன் மற்றும் எக்ஸ் எஃப் ஜி என்ற திரிபால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த நாட்டில் பதிவாகி வருவதாகக் வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 31 May 2025
Posted in செய்திகள்
போலந்து வெளிவிவகார அமைச்சர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மே 29 ஆம் திகதி அலரிமாளிகையில் சந்தித்தார். நாட்டுக்கு வருகை தந்துள்ள போலந்து தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 29 May 2025
Posted in செய்திகள்
நாட்டிலுள்ள அனைத்து தபாலகங்கள் மற்றும் உப தபால் அலுவலக ஊழியர்கள் நேற்று(28) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் நிலவும் தாமதத்திற்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிப்பகிஷ்கரிப்பு நாளை(30) நள்ளிரவு வரை முன்னெடுக்கப்படும் என தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 29 May 2025
Posted in செய்திகள்
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் 5ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் இன்று(29) ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. வௌ்ளவத்தை அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் தங்க முலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கடந்த வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Posted by plotenewseditor on 29 May 2025
Posted in செய்திகள்
வெலிக்கடை சிறைச்சாலையின் கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருளை சிறைச்சாலைக்குள் கொண்டுவருவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த போதைப்பொருளை உறுதியாக அடையாளம் காண்பதற்கும் அதன் எடையை மதிப்பிடுவதற்குமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி திசாநாயக்க தெரிவித்தார்.
Posted by plotenewseditor on 29 May 2025
Posted in செய்திகள்
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் முன்னாள் வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோவிற்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரதிவாதிகளுக்கு எதிராக கரம்போர்ட் கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு இன்று(29) அறிவிக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 28 May 2025
Posted in செய்திகள்
போலந்து நாட்டின் வௌிவிவகார அமைச்சர் Radosław Sikorski 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(28) காலை நாட்டிற்கு வருகை தந்துள்ளார். வௌிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உள்ளிட்ட தரப்பினரால் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார். போலந்து வௌிவிவகார அமைச்சர் இன்று(28) பிற்பகல் அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். Read more
Posted by plotenewseditor on 28 May 2025
Posted in செய்திகள்
இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவினர் மற்றும் இலங்கையின் ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் புதுடில்லியில் நேற்று(27) நடைபெற்றது. பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தனர். குறித்த தரப்பினர் இந்திய லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, உதவி சபாநாயகர், இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட இந்திய இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். Read more