கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று(03) விசேட தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் இந்தியாவின் சென்னையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு வந்துள்ளதாக கிடைத்த தகலுக்கமைய இந்தத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க கூறினார். Read more
03.05.2006இல் செட்டிகுளத்தில் மரணித்த தோழர் சௌந்தரம் (மரிசால் பற்றிக் ஜெபநேசன் – கோமரசன்குளம்) அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…..
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான காலம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகின்றது. தேர்தல் நடத்தப்படுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கடவுச்சீட்டு விநியோகிக்கும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் எதிர்வரும் 05, 06, 07 ஆம் திகதிகளில் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடமைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.