06.05.2008 அன்று வவுனியாவில் மரணித்த கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும், சிறந்த சமூக சேவையாளருமான தோழர் பவான் (கந்தையா செல்வராசா) அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று. இவர் வவுனியா எல்லைப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பதில் அரும்பணியாற்றினார். விடிவினை நோக்கி மக்களை அரசியல்மயப்படுத்துவதிலும் தீவிர ஈடுபாடு காட்டினார்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் இன்று(06) கைது செய்யப்பட்ட மேலும் 2 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் அவர்கள் இன்று(06) கைது செய்யப்பட்டனர்.
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று(6) நடைபெறுகின்றது. 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று(06) காலை ஆரம்பமானதுடன் வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 04 மணியுடன் நிறைவடையவுள்ளன. நாடளாவிய ரீதியில் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.