Header image alt text

14.05.1998இல் வவுனியா கோவில்குளம் தாக்குநலில் மரணித்த தோழர் கார்த்திக் (மாசிலாமணி ஜீவதாஸ்) அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இன்றைய தினமும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதன்படி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. அத்துடன் இலங்கை தமிழரசுக் கட்சியினரின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை – கம்பர்மலை சந்தியிலும் இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டது. Read more

ஆதாரமற்ற இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக நிராகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தவறான எண்ணக்கருவில் கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி குறித்து, அரசாங்கம் தமது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. Read more

வடக்கு, கிழக்கில் இன்றும்(14) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(14) யாழ்.வல்வெட்டித்துறையில் நினைவேந்தல் நிகழ்வும் கஞ்சி பரிமாறலும் இடம்பெற்றது. Read more

வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கைதிகள் தண்டனை அனுபவித்த வருடமொன்றுக்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு ஒரு வார மன்னிப்பு வழங்கப்படுமென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more