கொழும்பு கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினால் இருவர் காயமடைந்துள்ளனர். வீட்டிற்குள் பிரவேசித்த நபர் ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆணும், பெண்ணும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.