சிலாபம் – விலவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடும்ப தகராறு காரணமாகக் கணவன் தனது மனைவிமீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் பின்னர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும், இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிலாபம் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.