பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தருமாறு கோரி இன்று நுவரெலியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு மத்திய மாகாணத்தின் சமூக அபிவிருத்தி நிறுவனம் ஒன்றினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மறுக்கப்பட்ட உரிமைகள் உள்ளடக்கிய, வசனங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்திக் கொண்டு, கோசங்கள் எழுப்பியவாறு 1000ற்கும் மேற்பட்ட மக்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு தற்போதைய அரசாங்கம் நீதி வழங்க வேண்டுமென,போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் இதன் போது வலியுறுத்தினர்.