Header image alt text

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்றாகும்(மே 18).

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 10 ஆண் சந்தேக நபர்ளையும், இரு பெண் சந்தேக நபர்களையும் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. Read more

கொழும்பு ப்ளூமெண்டல் – சிறிசந்த செவன மாடி வீட்டுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் காவல்துறையினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரை பகுதியில், முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. Read more

இனிவரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சூரியனின் செய்திப் பணிப்பாளர் பரமேஷ்வரன் விக்னேஷ்வரனின் நெறியாள்கையில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். Read more

யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 16 ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும். 2009 இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானதுடன் பல பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. Read more

யாழ். எழுதுமட்டுவாழ் தெற்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் கழகத்தின் முன்னாள் தென்மராட்சி பிரதேச அரசியல் பிரிவு பொறுப்பாளராவார்.

யாழ்ப்பாணம் – செம்மணி, சிந்துப்பாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகளின் இரண்டாம் நாளான நேற்றைய தினம், மூன்றடி ஆழத்தில் முழுமையான என்புத் தொகுதியொன்றும், மண்டையோடும், கையொன்றும் மீட்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அகழ்வு செய்யப்படும் பகுதியின் வெவ்வேறு இடங்களிலிருந்து மீட்கப்பட்டதால், அந்த இடம் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. Read more

கல்கிஸ்ஸை கரையோர வீதி பகுதியில் காலி வீதிக்கு அருகில் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக உந்துருளியை செலுத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பன்னிபிட்டிய – மாகும்புர பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக கல்கிஸ்ஸை பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். Read more

கொழும்பு – கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவத்தையில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு 13ஐச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இன்று புதுக்கடை 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.