Header image alt text

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்கக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கிருஷாந்தி குமாரசுவாமி என்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ கோப்ரல் ஒருவர் உள்ளிட்ட 5 பிரதிவாதிகளும் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் ஏகமனதாக நிராகரித்துள்ளது.

Read more

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை இன்று சந்தித்தார்.  ஜனாதிபதி செயலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையிலான வர்த்தக தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான Richard Marles உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்தார். இந்த விஜயத்தின் போது அவுஸ்திரேலிய துணை பிரதமர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்திக்கவுள்ளதுடன் பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.