Header image alt text

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவர் இன்றைய தினம் மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உயிரிழந்த சிந்துஜா மற்றும் வேணுஜா ஆகியோரின் மரணத்துக்கு நீதி கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read more

தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற ஏராளமானோருக்கு முறையான முறைமை இல்லாமல், அரசாங்கம் ஆசிரியர் நியமனங்களை வழங்கி வருவதாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

Read more

வவுனியா, ரம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் தோட்டப் பகுதியில் இருந்து துருப்பிடித்த இரண்டு T-56 துப்பாக்கிகளும் 450 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர். கட்டுமானமொன்றிற்காகத் தோட்டப் பகுதியில் நிலத்தைத் தோண்டிய போது இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  உள்நாட்டு யுத்தத்தின் போது ஏதேனும் ஒரு அமைப்பு, துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களைப் புதைத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

Read more

வாழைச்சேனையின் ஒரு காலத்தில் செயலிழந்த காகிதத் தொழிற்சாலை இப்போது லாபத்தில் இயங்கி வருவதாகவும், அதன் நீண்டகால கடன்களைத் தீர்க்கத் தொடங்கியுள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். உற்பத்தி திறனை விரிவுபடுத்த புதிய இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Read more