வவுனியா மாநகரசபை மேயரும், எமது கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், கட்சியின் தொழிற்சங்க பிரிவு பொறுப்பாளருமான ஆசிரியர் தோழர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் நேற்று எமது கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களையும், தொடர்ந்து இந்திய உயர்ஸ்தானிகரையும் சந்தித்துள்ளார். மேலும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களையும் ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.