முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 36.9 மில்லியன் ரூபாய் வருமான வரியை செலுத்தாதமைக்கு எதிராக, உள்நாட்டு இறைவரி ஆணையாளரினால் தாக்கல் செய்த வழக்கில் சஜின் வாஸ் குணவர்தன நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2010 முதல் 2012 ஆம் ஆண்டுவரையில், சஜின் வாஸ் குணவர்தன வருமான வரி செலுத்தாதமை தொடர்பாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர், 2023 ஆம் ஆண்டு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
மனுதாரர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, பிரதிவாதிக்குப் பல அழைப்பாணை அனுப்பப்பட்டதாகவும், எனினும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை எனவும், நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைக் கருத்தில் கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி, பிரதிவாதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு உத்தரவிட்டு பிடியாணை பிறப்பித்தார்.