 வட புலத்தின் மூத்த பொதுவுடமைப் போராளி அமரர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் அன்புத் துணைவியாளர் திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் இன்றுகாலை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். இவர் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர் அமரர் தோழர் மீரான் மாஸ்டர் (கே.ஏ.சுப்பிரமணியம் சத்தியராஜன்) அவர்களின் அன்புத் தாயாரும், தீவிர இனப்பற்றாளரும், மொழி, மண், பண்பாடு என்பவற்றில் மிகுந்த பற்றுக் கொண்டு செயற்பட்டு வந்தவரும், சமூக நீதிக்கான தீவிர செயற்பாட்டாளருமாவார்.
வட புலத்தின் மூத்த பொதுவுடமைப் போராளி அமரர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் அன்புத் துணைவியாளர் திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் இன்றுகாலை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். இவர் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர் அமரர் தோழர் மீரான் மாஸ்டர் (கே.ஏ.சுப்பிரமணியம் சத்தியராஜன்) அவர்களின் அன்புத் தாயாரும், தீவிர இனப்பற்றாளரும், மொழி, மண், பண்பாடு என்பவற்றில் மிகுந்த பற்றுக் கொண்டு செயற்பட்டு வந்தவரும், சமூக நீதிக்கான தீவிர செயற்பாட்டாளருமாவார்.
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
