ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச தலைவர்கள் சிலரை இன்று (02) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் நடைபெறும் COP 28 எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளார். இதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனை இன்று சந்தித்துள்ளார். இதன்போது, இரு அரச தலைவர்களும் இருதரப்பு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக X தளத்தில் இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரேசில் ஜனாதிபதி Lula da Silva-வையும் இன்று சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத் திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் இங்கர் அண்டர்சன் (Inger Andersen) மற்றும் உகாண்டா சுகாதார அமைச்சர் Dr. Aceng Jane Ruth ஆகியோரின் ஆதரவுடன் ஜனாதிபதி குறித்த யோசனையை முன்மொழிந்தார்.