இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட அந்நாட்டின் சிரேஷ்ட இராஜதந்திரியான ஶ்ரீ சந்தோஷ் ஜா கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த சிரேஷ்ட இராஜதந்திரியான ஶ்ரீ சந்தோஷ் ஜா, கடமைகளை பொறுப்பேற்றதாக இலங்கைக்கான இந்திய தூதரம் தமது X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. ஶ்ரீ சந்தோஷ் ஜா இதற்கு முன்னர் பெல்ஜியத்திற்கான இந்திய தூதுவராக கடமையாற்றியுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.