நத்தார் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதிகள் இன்று(25) விடுதலை செய்யப்பட்டனர். நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 1,004 சிறைக்கைதிகள் இன்று(25) விடுவிக்கப்படுகின்றனர்.  அதனடிப்படையில், வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து 23 கைதிகள் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் விடுதலை செய்யப்பட்டனர். சிறு குற்றங்களை புரிந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.