Feb 24
19
Posted by plotenewseditor on 19 February 2024
Posted in செய்திகள்

19.02.2016இல் மரணித்த யாழ். நெடுந்தீவை பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இளைஞர் பேரவையிலும், அதன் பின்னர் காந்தீயம் அமைப்பிலும் தம்மை இணைத்துக்கொண்டு மக்கள் பணியினை ஆரம்பித்த இவர் அதன் பின்னர் கழகத்தின் அரசியல் பிரிவில் அதன் ஆரம்ப காலம் தொட்டு தீவிர செயற்பாட்டாளராக தொடர்ச்சியாக இயங்கி வந்தார்.