தமிழீழ மக்கள் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (PLOTE, DPLF) சிரேஷ்ர உபதலைவரும் , ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் (DTNA ) செயலாளருமான தோழர் இராகவன் , R.R ( வேலாயுதம் நல்லைநாதர் ) அவர்களின் அஞ்சலி நிகழ்வு கனடாவின் Toronto நகரில் இடம் பெற்றது.
வவுனியாவில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அதே தினமான ஞாயிற்றுக்கிழமை இந்த அஞ்சலி கூட்டம் இடம் பெற்றிருந்தது. இந்த நிகழ்வினை கழக தோழர்கள், நண்பர்கள் மற்றும் சுழிபுரத்தினை சேர்ந்த அன்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் கழகத்தின் கனடா கிளையின் பொறுப்பாளர் தோழர் க.கந்தசாமி மற்றும் பொருளாளர் இ.விஜயசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.