நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் யாழ். தீவகங்களுக்கு இடையிலான படகுச்சேவை இன்று (24) இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடற்பிராந்தியங்களில் கடும் காற்று வீசுவதால், யாழ்ப்பாணம் குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவிற்கான படகுச் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஊர்காவற்றுறை கண்ணகியம்மன் இறங்குதுறையிலிருந்து அனலைதீவு மற்றும் எழுவைத்தீவுக்கான படகுச் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகமைத்துவ பிரதி பணிப்பாளர் T.N. சூரியராஜா தெரிவித்தார்.