இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜோன் ப்ரான்கோயிஸ் பெக்டெட் (Jean-François Pactet) இன்று திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்தார். 53 வயதான அவர் இன்று காலை ராஜகிரியவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் வெலிக்கடை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.