ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மனு கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் குறித்த மனு மீதான விசாரணையை கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி சமரி வீரசூரியவுக்கு மாற்றுவதாக நீதிபதி சந்துன் விதான இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.