வேதனம் அதிகரிக்கப்படாமை, பதவி உயர்வு வழங்கப்படாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி நாளை முதல் மூன்று நாட்களுக்கு குறித்த தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் குமுது கட்டபொலுகே தெரிவித்துள்ளார். அரச பாடசாலைகளில் உள்ள கல்வி சாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு, அரசாங்கம் இதுவரை உரிய தீர்வினை வழங்கவில்லை என அந்த சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.