அமரர் வை.விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக அம்பாறை மாவட்டம் வீரமுனை சீர்பாத தேவி சிறுவர் இல்லப் பிள்ளைகளுக்கு இன்று (26.06.2024) புதன்கிழமை விசேட மதிய உணவு வழங்கப்பட்டது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் இரத்தினகுமார் அவர்கள் தனது தந்தையாரான இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார் அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் ப.ரவிச்சந்திரன்(சங்கரி), கட்சியின் மாவட்ட செயலாளர் கெங்கா, கட்சியின் மாவட்ட இளைஞர் பிரிவு பொறுப்பாளர் நவநீதன், கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்பாட்டாளர் குபேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.