யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட பதில் அரச அதிபர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் (Dinesh Gunawardena) நியமனக் கடிதம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. குறித்த நியமனக் கடிதங்கள் இன்று (03.07.2024) கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட கடமை நிறைவேற்று அரச அதிபர்களாக இருந்த ம.பிரதீபன் மற்றும் எஸ்.முரளிதரன் ஆகிய இருவருக்குமே முழு நேர பதில் அரச அதிபராக பணியாற்ற அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையில், குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இருவரும் நாளையதினம் மாவட்ட செயலகங்களில் தமது கடமைகளை பொறுப்பேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.