அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவை முன்னிட்டு லண்டனில் வசிக்கும் திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் தனது இன்று (11.07.2024) காலை கிளிநொச்சி விவேகானந்தநகர், பாரதிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட வறுமைக் கோட்டின்கீழான 50 குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணப் பொதிகளை வழங்கியுள்ளார்.

மேற்படி நிகழ்வில் எமது கட்சியின் செயலாளர் பற்றிக், தேசிய அமைப்பாளர் பீற்றர், தோழர் மணியம், தர்மலிங்கம் அவர்களின் புதல்வர் நாகராஜா, தோழர் சூரி, தோழர் ரூமி, தோழர் சாந்தன், சதா, சங்கர் , கிராம சேவையாளர், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர், கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலய முதல்வர் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதேவேளை கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலயத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டின்கீழான தெரிவுசெய்யப்பட்ட 50 மாணவர்களுக்கான உலருணவு நிவாரணப் பொதிகளையும் திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் இன்று வழங்கியுள்ளார்.