தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமரர் அ.அமிர்தலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன், கழகக் கண்மணிகள், சக அமைப்புப் போராளிகள், ஆதரவாளர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களையும் நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் கிரான்குளம் சீமூன் ஹோட்டல் மண்டபத்தில் இன்று (14-07-2024) மாலை 3மணியளவில் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது உயிர்நீத்த தோழர்களின் உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்தலுடன், நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அஞ்சலி உரைகளும் நிகழ்த்தப்பட்டன.
இந்நிகழ்வில் கழகத்தின் அரசியல்துறைச் செயலாளர் அமரர் வாசுதேவா அவர்களின் சகோதரி அருந்ததி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் நா.இரத்தினலிங்கம்(குரு), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் சிறிஸ்கந்தராஜா(பீற்றர்),
இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு மாவட்ட தலைவர் த.வசந்தராஜா, கட்சியின் சமுக மேம்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளர் ந.ராகவன், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் சாரதா,
கழகத்தின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் மதி, கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கா.கமலநாதன், மாவட்ட பொருளாளர் கிருஸ்ணராஜாஜி, மாவட்ட இளைஞர் பிரிவு பொறுப்பாளர் லோகநாதன், மாவட்ட மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் இந்திராணி, கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்கள் அருணாசலம், சங்கரப்பிள்ளை, ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
உயிர்நீத்த ஐம்பது கழக உறுப்பினர்களின் குடும்ப உறவுகளுக்கு உதவுவதற்காக ஜெர்மன் கிளையினர் ரூபாய் 150,000/-வழங்கியிருந்தனர்