வேதன உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துஇ ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சட்டப்படி தொழில் செய்யும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. தமது கோரிக்கைகள் தொடர்பில்இ கல்வி அமைச்சர் மற்றும் அரச சேவை ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கம் நேற்று கலந்துரையாடியிருந்தது. இந்த நிலையில்l பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையினால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சட்டப்படி தொழில் செய்யும் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அந்த தொழிற்சங்கங்களின் இணைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.