இலங்கையில் கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியன இணைந்து இலங்கை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவர்களை விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த 20 இந்திய மீனவர்களையும் நாளைய தினம் இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.