எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காகத் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குகின்ற தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பினரால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பரப்பில் இயங்குகின்ற ஏழு அரசியல் கட்சிகள் மற்றும் 7 சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்தக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இதன் ஜனாதிபதி பொது வேட்பாளராக பா. அரியநேத்திரனை நியமிப்பதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த கட்டமைப்பின் உறுப்பினர்களை ஜனாதிபதி சந்திக்க விரும்புவதாக அழைப்பு விடுத்தமையைப் பாராட்டுவதோடு, பேசுவதற்கு உத்தேசித்துள்ள விடயங்கள் பற்றி எம்முடன் பகிர்ந்து கொள்ளப்பட்டால் நல்லதாக இருக்குமென கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.