ஜனாதிபதி தேர்தலில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ள, தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கான கட்டுப்பணம் இன்று முற்பகல் வேளையில் செலுத்தப்பட்டது. சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான, தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் த.சிற்பரன், பொது வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார்.