இணைந்த வடகிழக்கில் தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்காகத் தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். முள்ளியவளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெற்ற பா.அரியநேத்திரனின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் தர்மலிங்கம் சித்தார்த்தன்இ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.