இலங்கைக்கான ஒஸ்ட்ரிய தூதுவர் கத்தரினா வைசர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கை மற்றும் ஒஸ்ட்ரியா நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டிருந்தது. மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திரஇ பொருளாதார மற்றும் கலாசார தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.