புதிதாக நியமனம் பெற்ற 2 தூதுவர்கள் இன்று தமது நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கையளித்தனர். எகிப்து அரபுக் குடிரயரசின் தூதுவர் அடெல் இப்ராஹிம் (Adel Ibrahim) மற்றும் ஜப்பான் தூதுவர் இசோமாடா அகியோ (ISOMATA Akio) ஆகியோர் இலங்கைக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நற்சான்று பத்திரங்களை கையளித்த பின்னர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.